அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய தகவல்களை திருடு

0
81

2020 ம் ஆண்டு அவுஸ்திரேலியா இந்தியாவின் ரோ புலனாய்வுபிரிவை சேர்ந்த  இருவரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றியது என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ரோவிற்கும் மேற்குலகின் உள்நாட்டு பாதுகாப்பு சேவைகளை சேர்ந்தவர்களிற்கும் இடையிலான மோதல்களில் இதுவும் ஒன்று என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை இரகசிய தகவல்களை திருடுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட இந்தியாவின் புலனாய்வு அமைப்பை சேர்ந்த இருவர் வெளியேற்றப்பட்டனர் என 2020இல் வெளியேற்றப்பட்டனர் என அவுஸ்திரேலிய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இருவர் வெளியேற்றப்பட்டனர் என அவுஸ்திரேலியனும் சிட்னி மோர்னிங் ஹெரால்ட்டும் தெரிவித்துள்ள அதேவேளை இந்தியாவின் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களின் நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஏபிசி எனினும் எத்தனை பேர் வெளியேற்றப்பட்டனர் என்பதை தெரிவிக்கவில்லை.

மிகவும் இரகசியமான பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் விமானநிலைய பாதுகாப்பு அவுஸ்திரேலியாவின் வர்த்தக உறவுகள் தொடர்பான இரகசிய விபரங்களை திருட முயன்ற இந்தியாவின் புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவர் வெளியேற்றப்பட்டனர் என ஏபிசி தெரிவித்துள்ளது.

2020 இல் அவுஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அமைப்பினால் வெளியேற்றப்பட்ட உளவாளிகளின் கூடுகளை சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களை உன்னிப்பாக அவதானித்துவந்தனர் தற்போதைய முன்னாள் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திவந்தனர் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது.

2021 இல் ஆற்றிய உரையொன்றில் அவுஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் இந்த சம்பவத்தை மறைமுகமாக தெரிவித்திருந்தார் என ஏபிசி தெரிவித்துள்ளது.