ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் குழு கூட்டம் இன்று

0
110

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்  குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்  ஆளும் தரப்பு கட்சி தலைவர்கள் உட்பட கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பாராளுமன்றத்தில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதம், உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகள் விவகாரம் உட்பட பல விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கம், நிலையான அமைச்சரவை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆளும் கட்சி கூட்டத்தில் முக்கிய விடயங்களை முன்வைக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் குழு கூட்டம் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சியினர் இன்று உத்தியோகபூர்வ தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.