இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 1 மணிக்கு இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுவுள்ளார்.
பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை இடைக்கால வரவு செலவுத் திட்ட உரை இடம்பெறும்.
அதனை அடுத்து நாளை காலை 9.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை நடைபெறும்.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர், குழு அமர்வு மற்றும் மூன்றாம் வாசிப்பின் பின்னர், சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இதேவேளை, இடைக்கால வரவு செலவுத் திட்ட பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இன்று காலை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது இடைக்கால வரவு செலவுத் திட்ட (ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.