இந்திய-இலங்கை ஒப்பந்தம் மாற்றங்களுக்கு அடிப்படை-எஸ்.ஜெய்சங்கர்

0
143

தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கையொப்பமிடப்பட்ட 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம், மாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே எஸ்.ஜெய்சங்கர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இலங்கைக்கான ஆதரவில், தமிழ் சமூகத்iயும் உள்ளடக்கிய முழு இலங்கைக்குமே இந்தியா ஆதரவளிக்கின்றது எனவும், எந்தவொரு இனவாத அனுகுமுறையும் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். ஜெனிவாவில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வரைவுத் தீர்மான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமை தொடர்பில், கருத்துரைத்த ஜெய்சங்கர், அது இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டிற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார். தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கையொப்பமிடப்பட்ட 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் நிலை, தொடர்ந்தும் மாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை என்றால், இந்தியா தனது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக அமைந்துவிடும் எனக் குறிப்பிட்ட இந்திய வெளிவிகார அமைச்சர், சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது, அந்த நாட்டுக்கு, இந்தியா வழங்கிய பொருளாதார ஆதரவு, முழு இலங்கை நாட்டிற்கும் உரியது அன்றி எந்தவொரு இனவாத அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றும் கருத்து வெளியிட்டார்.