இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பலில் 40, 000 மெட்ரிக் டன் டீசல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், இலங்கைக்கு பல்வேறு கட்டங்களாக எரிபொருள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.