வவுனியா, ஓமந்தை விபத்தில் உயிரிழந்த இந்திய துணைத் தூதரக அதிகாரியின் புதல்வரும் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த பிரபாகர சர்மா அக்ஷய் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையிலேயே, நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரியான சச்சிதானந்த குருக்கள் பிரபாகர சர்மா குடும்பத்தாருடன் தனிப்பட்ட பயணமாக இந்தியா சென்று திரும்பியிருந்தார். கட்டுநாயக்காவிலிருந்து காரில் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த போது, வவுனியா – ஓமந்தையில் கார் டிப்பருடன் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், காரை செலுத்தி வந்த பிரபாகர சர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரின் மகன், மனைவி, மாமானார் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே காயமடைந்த பிரபாகர சர்மா அக்ஷய் நேற்றிரவு உயிரிழந்தார்.