இந்தியா – இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர், தலைமன்னார் கடற்பரப்பில் கைது!

0
20

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியா -இராமேஸ்வர மீனவர்கள் 14 பேர் இன்று அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு இந்திய இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும், இழுவைப் படகுகளும் தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர், மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர்.