இப்படியும் நடக்கிறது

0
128

முன்னரும் இந்தப் பத்தியில் தெற்கு ஊடகங்கள் பற்றி எழுதி யிருக்கின்றோம். தமிழ் அரசியல் பற்றிய, அவர்களின் புரிதல் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை அவ்வப் போது அவர்களின் செய்தியிடலில் கண்டுகொள்ளலாம். கடந்த வருடம் உள்ளூராட்சி தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடை பெற்றபோதே தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, தமிழ் அரசுக் கட்சி வெளியேறிவிட்டது. அவர்கள் வெளியேறிய பின்னர் கூட்டமைப்பில் எஞ்சியிருந்த ரெலோ, புளொட் ஆகிய இரண்டு பங்காளிக்கட்சிகளும் தாமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று பிரகடனப்படுத்திக்கொண்டதுடன், மேலும் மூன்று கட்சி களையும் சேர்த்துக்கொண்டு பெரும் கூட்டணியாக பரிண மித்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயக போராளி கள் கட்சி என்ற மூன்று கட்சிகளுடன் இப்போது ஐந்து கட்சி கூட்டணியாக இயங்கி வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப் பிலிருந்தபோது கூட்டமைப்பை பதிவுசெய்யவேண்டும் என்று பங்காளிக் கட்சிகள் அடிக்கடி கோரிக்கை வைத்தபோதிலும் அதற்கு தமிழ் அரசு செவி சாய்க்கவில்லை.
ஆனால் தமிழ் அரசு இல்லாத கூட்டமைப்பு, தன்னை பதிவுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டு இயங்காமல் இருந்த ‘ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி’ என்ற கட்சியில் இணைந்து தமது கூட்டணியை பதிவுசெய்யப்பட்ட கட்சியாக மாற்றியது அந்த புதிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அதாவது இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்று இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனாலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் அரசு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே போட்டியிட்டிருந்தாலும், அவர்கள் அனைவரையும் பொறுத்தவரை போட்டியிட்டு வெற்றிபெற்ற கட்சியின் உறுப்பினர்களாகவே இன்றும் பாராளுமன்றில் இருக்கிறார்கள். அதாவது தமிழ் அரசு எம்.பி.க்கள்தான். தமிழ் அரசியலில் இத்தனை சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்ட பின்னரும் தெற்கு ஊடகங்கள், நமது எம். பி.க்களை தமிழ் தேசியக் கூட்ட மைப்பு எம்பிக்கள் என்றுதான் அழைக்கின்றன. இன்றும் பல ஊடகங்கள் சுமந்திரன் எம்.பி.யை கூட்டமைப்பின் பேச்சாளர் என்று அழைப்பதைக் காணலாம்.
அதுவல்ல, இன்று நாம் சொல்ல வருவது. நேற்று வெளியான பிரபல ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியி ருக்கலாம். முதலில் அந்தச் செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்பை கீழே தருகின்றேன்: ‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு தமிழ் வேட்பாளரும் தமது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டி யிடமாட்டார்கள் என வட மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ‘யாழ்ப்பாணத்தில் ஊடகங் களுக்கு கருத்து தெரிவித்த சிவஞானம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒரு வர் போட்டியிட வேண்டும் என வடக்கு, கிழக்கில் பல்வேறு அரசி யல் கட்சிகளினால் கோஷம் எழுப் பப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சில கட்சிகள் தங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப ஜனாதிபதி வேட்பாளராக இருக்கக்கூடிய நபர்களின் பெயர்களை முன்மொழிந்து தமது கருத்தை வெளியிட்டன. ‘எவ்வாறாயினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவர் வரமாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. மாறாக தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்மொழிய முன்வரும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம் என சிவஞானம் தெரிவித்தார்.
‘ இதுவே அந்த செய்தி. முதலில் சிவஞானம் ஐயா மேலேயுள்ளது போன்று எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதற்கு அப்பால், அவர் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித் துவப்படுத்தவுமில்லை. பொதுவேட்பாளர் குறித்து அவர் தனது கருத்தை மாத்திரமே தெரிவித்திருந்தார். அதுகுறித்து இந்தப் பத்தியிலும் இரண்டு தினங்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன். ஒருவருக்கு பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடவேண்டும் என்று சொல்வதற்கு எவ்வாறு உரிமை இருக்கின்றதோ அதே போல மற்றும் ஒருவருக்கு அது தேவையற்றது என்று சொல்வதற்கும் உரிமை இருக்கின்றது.
ஆனால் சிவஞானம் ஐயா அங்கம் வகிக்கும் தமிழ் அரசு கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப் பட்டுள்ள சிவஞானம் சிறிதரன் அவர்களோ, ‘ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கைய ளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது’ என்று தெரிவித்திருக்கிறார். அவ்வாறு கட்சியும் முடிவெடுத்தால், சிவஞானம் ஐயாவும் கூட கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு அந்த பொது வேட் பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம். ஆனால், தெற்கு ஊடகங்களோ, தமிழ் அரசியல் பற்றி தமக்கு விருப்பமான எதனையும் பிரசுரித்து விட்டு போகட்டும். ஆனால் அதற்காக அது தமிழ் மக்களின் விருப்பமோ முடிவுமோ ஆகப் போவதில்லை.! – ஊர்க்குருவி.