30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இரணைமடு குளத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஊடக 50 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ள.
தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்துவதையும் நோக்காக கொண்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீனவ சங்கம் மற்றும் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நன்னீர் மீன்பிடிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இரண்டாம் கட்டமாக குளத்தில் மீன் விடும் திட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அதிகார சபை பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், நீர்பாசனத் திணைக்களத்தினர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளர், மீனவர்கள் என்ன பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles