இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறப்பு!

0
60

மழையுடனான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடுதியாக அதிகரித்துவரும் நிலையில், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டதன் ஊடாக வினாடிக்கு 11 ஆயிரத்து 800 கன அடி நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வான் பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாகவும், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களும் வான் பாயும் மட்டத்தை நெருங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.