இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இலங்கையின் வர்த்தக, வாணிப உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தாய்லாந்தின் வர்த்தக அமைச்சர் ஆகியோரால் கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி கையொப்பமிடப்பட்டுள்ளது. குறித்த உடன்படிக்கை ஜூலை 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் உடன்படிக்கையின் 14.10ஆம் பிரிவுக்கமைய உள்ளகச் சட்ட ரீதியான தேவைப்பாடுகள் மற்றும் செயல் ஒழுங்குவிதிகள் முழுமையடைந்துள்ளமையைக் குறிப்பிட்டு ஒருதரப்பினர் அடுத்த தரப்பினருக்கு மேற்கொள்ளும் இறுதி அறிவித்தலின் பின்னர், இரண்டாம் தரப்பினர் அறிவிப்பதன் மூலம் முப்பதாம் நாளிலிருந்து உடன்படிக்கை அமுலாகும்.
இவ்விடயத்தின் அடிப்படையில் இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்று அங்கீகரிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.