இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் வெள்ள நீரால் மூழ்கியுள்ளது.

0
135

அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையாலும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் உள்ள அனைத்து பீடங்களும்
முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் மாணவர்களுக்கு நேற்று முதல், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களும் வெளியேறி தங்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதே வேளை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் உள்ள அஸ்ரப் ஞாபகார்த்த நூலகம், நிர்வாகக் கட்டடத் தொகுதி என்பன வெள்ள ஆபாயத்தை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.