இலங்கை வந்தார் பான் கீ மூன்

0
142

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் மூன், இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டு இன்று (பெப் 06) அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.

பான் கீ மூன், அவரது பாரியார் உள்ளிட்ட உட்பட நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தக் குழுவினர் சிங்கப்பூரில் இருந்து UL-309 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானம்  மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பான் கீ மூன் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றனர்.