இலங்கையில் 8 இலட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி

0
279

இலங்கையில் இதுவரையில் 8 இலட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் நேற்று மாத்திரம் 14 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கொரோனா தடுப்பூசி செலுத்தல் தொடர்பான சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் இதுவரையில் 8 இலட்சத்து 84 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.