இஸ்ரேலின் மொசாட் பிரிவைச் சேர்ந்த உளவாளி ஒருவரை ஈரான் தூக்கிலிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் அறிக்கையில் கைது செய்யப்பட்ட உளவாளி வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஈரானின் ரகசிய தகவல்களை வெளியிடும் குற்றத்தில் அந்த உளவாளி தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அந்த உளவாளி சஹீதானில் உள்ள சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.