உக்ரைன் மின்னுற்பத்தி கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்

0
33

மின் உற்பத்தி கட்டமைப்பை இலக்கு வைத்து, உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்தப் போரின் தொடக்கத்தில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்ய இராணுவம் அதிரடியாக கைப்பற்றியது.

அதே சமயம் உக்ரைனுக்கு பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் இன்று மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

குறிப்பாக உக்ரைனின் மின் உற்பத்தி கட்டமைப்பை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை அமைச்சர் ஹெர்மன் ஹாலுஸ்சென்கோ தெரிவித்துள்ளார்.

அதிநவீன ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் உக்ரைனின் வான்பரப்பில் பல்வேறு முறை ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

குறிப்பாக உக்ரைனின் மேற்கு பகுதிகளில் பாலிஸ்டிக் கின்ஸால் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.