உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காலியில் இரு சுகாதார அதிகாரிகள் இடமாற்றம்

0
234

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காலி மாவட்ட பிரதான சுகாதார அதிகாரிகள் இருவர் இடமாற்றப்பட்டுள்ளனர்.

காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரியந்த ஜீவரத்ன மற்றும் காலி பிரதேச தொற்று நோய்ப் பிரிவின் பிரதானி வேனுர குமார சிங்கராச்சி ஆகியோரே இடமாற்றப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி காலி பிரதேசத்துக்குச் சென்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்த இருவருக்கு, கொரோனா தடுப்பூசி வழங்கியமைக்காகவே, மேற்படி அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர்.

மிகவும் இரகசியமான முறையில் குறித்த இருவருக்கும் அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளின் முடிவுகளுக்கு அமையவே குறித்த அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர்.