உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ஆர்ஜென்டினா

0
169

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து தொடரில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆர்ஜென்டினா அணி மெக்சிகோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதல் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டிய போதிலும் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் ஆர்ஜென்டின தலைவர் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து 87வது நிமிடத்தில் பெர்னாண்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து ஆர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை ஆர்ஜென்டின அணி பதிவு செய்தது.