இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படும் எமக்கான உணவை நாமே பயிரிடுவோடும் செயற்றிட்டத்தின் ஊடாக, யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வீட்டுத் தோட்டங்களுக்கான பயிர்கள் வழங்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கு புனர்வாழ்வு நிறுவனத்தினரதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடாக் கிளையினரதும் அனுசரணையில் தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில், வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான பயிர்கள் வழங்கப்படுகின்றன. அத்தோடு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. சண்டிலிப்பாய், மூளாய், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு இந்த மரக்கன்றுகளும், பயிர்ச் செடிகளும் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் உட்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்த செயற்றிட்டத்தில் பங்கெடுத்தனர்.