எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பம்!

0
215

நாளை புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 7 நாட்களாக கெரவலப்பிட்டி – தல்தியாவத்த கடலில் நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கு உரிய 39 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த குறித்த கப்பலுக்கு தாமதக் கட்டணமாக சுமார் 2 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை புதன்கிழமைமுதல் சந்தைக்கு மீண்டும் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.