எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தல்!

0
96

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு குறித்த மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று 507 விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் நெடுந்தீவு கடற்பரப்பில், எல்லை தாண்டி, மீன்பிடித்துக் கொண்டிருந்த 03 படகுகளை கடற்படையினர் கைப்பற்றியதுடன் 22 மீனவர்களையும் கைது செய்தனர்.

இந்நிலையில், வயிற்று பிழைப்பிற்காக மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.