எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது!

0
209

இராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்றுக் காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு
பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீனவர்கள் நேற்று நள்ளிரவு இலங்கை தலைமன்னாருக்கும் நாச்சிகுடாவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது,
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு படகையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.
இதுவேளை ஒரு படகில் வருகை தந்த 5 மீனவர்கள், இயந்திர கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்ததையடுத்து, படகை சோதனை செய்த கடற்படையினர், இயந்திர கோளாறு உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த படகையும் அதிலிருந்து 5 மீனவர்களையும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.