ஐ.எம்.எவ் ஒப்பந்தம் : ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை சபையில் அறிவித்தார் சபாநாயகர்!

0
167

சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்விதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை என ஜனாதிபதி தனக்கு அறிவித்ததாக, சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு மட்டுமே எட்டப்பட்டதாகவும், இது குறித்து அமைச்சரவையிலும் கலந்துரையாடப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தாக, சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் குறித்து சபாநாயகர், பிரதமர், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.