கடந்தாண்டு 1 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிப்பு

0
71
கடந்த ஓராண்டில் 1 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) உட்பட பல நிறுவனங்கள் நேற்று குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இது தெரியவந்ததாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.துண்டிக்கப்பட்ட இணைப்புகளை உடனடியாக மீளப் பெற்றுத் தருமாறும், மின்சாரக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் முறைமையை நடைமுறைப்படுத்துமாறும் பாராளுமன்ற உறுப்பினர் வலேபொட வலியுறுத்தியுள்ளார்.மறு இணைப்புக் கட்டணத்தை வசூலிக்காமல் இணைப்புகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும், மறு இணைப்புக் கட்டணத்தை தவணை முறையிலும் வசூலிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.