கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரன்வத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபாரருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்டுநாயக்க, ஆடிஅம்பலம் பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 189 லீற்றர் கோடா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.