கண்டி போகம்பர குளத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

0
127

கண்டி போகம்பர குளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  இன்று காலை பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புக்கான  காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், இது தற்கொலையா என விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.