27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கந்தானை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : பெண்ணொருவர் உட்பட 3 பேர் கைது

கடந்த ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கந்தானை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்கள் தொம்பே, உடுகம்பொல மற்றும் கிரிவத்துடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.கைதானவர்களிடம் இருந்து ரீ – 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 57 தோட்டாக்கள், கையடக்க தொலைபேசி மற்றும் வேன் ரக வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles