கரையோர மார்க்க தொடருந்து சேவை நேர அட்டவணையின் திருத்தம் பிற்போடப்பட்டது.

0
152

இன்று முதல் கரையோர மார்க்க தொடருந்து சேவையின் நேர அட்டவணையில் ஏற்படுத்தப்படவிருந்த திருத்தம் பிற்போடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த தொடருந்து மார்க்கத்தில் பயணிக்கும் சில தொடருந்துகள் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவோ அல்லது உரிய நேரத்திற்கு முன்னரோ பயணத்தை ஆரம்பிக்கும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று தெரிவித்தது. பெரும்பாலும் இது அலுவலக தொடருந்துகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில், குறித்த தொடருந்து நிலையங்களின் ஊடாக பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குறித்த தீர்மானம் தொடர்பில் தொடருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கோ அல்லது தொடர்பாடல் பிரிவிற்கோ நேற்று பிற்பகல் வரையில் உரிய வகையில் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்தநிலையில், இன்று முதல் கரையோர மார்க்க தொடருந்து சேவையின் நேர அட்டவணையில் ஏற்படுத்தவிருந்த திருத்தம் பிற்போடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.