கொழும்பு கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டோவிட்ட பிரதேசத்தில், பெண்ணொருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று களுபோவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸை படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 52 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.