கல்முனை மாநகர சபையில் விசேட பொதுச் சபை அமர்வு இன்று பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது இதன்போது கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூரின் பெயரை சூட்டுவதற்காக கல்முனை மாநகர சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்பிரேரணை தொடர்பில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஆதரவாகவும் தமிழ் உறுப்பினர்கள் எதிராகவும் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்திருந்தனர்