களனி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

0
86

மட்டக்குளி கதிரான பிரதேசத்தை அண்டிய களனி ஆற்றில் தலை மற்றும் கைகளற்ற நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை கண்டெடுத்ததாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், வலது காலின் கீழ் பகுதி முழங்காலில் இருந்து வெட்டப்பட்டுள்ளதாகவும் சடலம் வீங்கியுள்ளதாகவும், அதன் பாகங்களை விலங்குகள் தின்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கந்தானை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருடையது என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.