களுத்துறை கடற்கரையில் பெருகும் காதல் ஜோடிகள்: பொலிஸார் நடவடிக்கை

0
195

களுத்துறை கடற்கரை மற்றும் கடற்கரை மரங்களின் உள்ளே இருந்த 24 காதல் ஜோடிகளை கைது செய்த பொலிஸார், எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவித்துள்ளனர்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் நோக்கில் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

களுகங்கைக்கு அண்மித்த கடற்கரையில் உள்ள பாறைகளுக்கு இடையில் மற்றும் மரப் புதர்களுக்கு இடையில் இருந்து கைது செய்யப்பட்ட அவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்கியிருப்பது பல்வேறு குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் என கடும் எச்சரிக்கையுடன் இந்த இளைஞர், யுவதிகள் குழு விடுவிக்கப்பட்டுள்ளது