காங்கோ குடியரசில் நெரிசலில் சிக்கி 31 போ் பலி

0
80

மேற்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் ராணுவ நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 போ் பலியாகியுள்ளனர்.

காங்கோ குடியரசின் ராணுவத்துக்கு ஆள் சோ்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நூற்றுக்கணக்கான இளைஞா்கள் தோ்வு நடைபெறும் மைதானத்துக்கு ஒரே வாயில் கதவு வழியாக அனைவரும் ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் நுழைய முயன்றபோது  ஏற்பட்ட நெரிசலில் 31 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

காங்கோ குடியரசில் வேலைவாய்ப்பின்மை அதிகமென்பதால் அங்கு ராணுவப்பணியில் சோ்வதற்கு ஏராளமானவா்கள் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.

ராணுவத்தில் மொத்தம் 1,500 இடங்களே வெற்றிடமாகவுள்ள நிலையில், தினந்தோறும் சராசரியாக சுமாா் 700 போ் அந்த இடங்களுக்கு விண்ணப்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது