காணாமல் ஆக்கப்பட்டோரின் இறுதி கட்டப்பதிவுகள் முன்னெடுப்பு

0
90

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா பிரதேச செயலகத்தில் பதிவு நடவடிக்கைகள் இடம்பெற்றன.


பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இறுதி கட்டப் பதிவுகளை மேற்கொண்டதோடு விடயங்களையும் கேட்டறிந்திருந்தனர்.

முன்னதாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகளை மேற்கொள்வதற்காக பதிவு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் 62 பேருக்கு தபால் மூலமாகவும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாகவும் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.