கொழும்பு, வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
நாட்டில் வியாழக்கிழமை பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், கொழும்பு 07, கண்டி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை காற்றின் தரம் 32 தொடக்கம் 80க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பெரும்பாலான நகரங்களில் மிதமான நிலையிலும், கொழும்பு, வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் இருக்கும் என்பதை குறிக்கின்றது.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு மிதமானதாக இருக்கும்.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.