28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் திடீரெனக் குவிக்கப்பட்ட பொலிஸ் வாகனங்களால் பதற்றம்!

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகளவிலான பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டன.
போராட்டம் இடம்பெறும் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.
காலி முகத்திடலில் பொலிஸ் வாகனங்கள் எதற்காக நிறுத்தப்பட்டன என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.
கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகள் இன்றி அமைதியாக இடம்பெற்றவருகின்றது. இதன் காரணமாக இதுவரை குறைந்தளவு பொலிஸ் பிரசன்னமே காணப்பட்ட நிலையில் இன்று காலை அதிகளவிலான பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்ததால் பதற்றமான கூழல் நிலவியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles