கால்நடைகளைக் கொண்டுசெல்வதற்கு தடை!

0
170

வட மாகாணத்தின் சில பகுதிகளில் கால்நடைகளிடையே பரவும் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கிடையே கால்நடைகளை கொண்டு செல்வதற்கான சுகாதார அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அம்மை நோய்த் தொற்றுக்குள்ளான சுமார் 25 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் கால்நடைகளிடையே இந்தத் தொற்று தொடர்ச்சியாக நீடிக்காது என்றும், இதேவேளை தொற்றுக்குள்ளான கால்நடைகளை தனியாக பராமரிப்பதனூடாக தொற்றுப் பரவும் வீதத்தை குறைக்க முடியும் எனவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் நோய்த் தொற்றுக்குள்ளான கால்நடைகளின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன்இ அது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.