திஸ்ஸமஹாராம – ரன்மினிதென்ன பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த நபரை கைது செய்வதற்காக காவல்துறையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் குறித்த நபரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
திஸ்ஸமஹாராம – ரன்மினிதென்ன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.