கிராம உத்தியோகத்தர் தரம் மூன்று சேவைக்குள் உள்வாங்கப்பட்டவர்களுக்கு, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மூன்று மாத பயிற்சிநெறியொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது.
கிராம உத்தியோகத்தர் தரம் மூன்றிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சையில் எழுத்து மூலம் மற்றும் நேர்முக பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில்
தெரிவு செய்யப்பட்ட, மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் கடமையாற்வோர் பயிற்சி நெறியில் பங்குகொண்டுள்ளனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நடைபெறுகின்ற மூன்று மாத காலம் பயிற்சியின் ஆரம்ப பயிற்சி நிகழ்வு இன்று
இடம்பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் உட்பட பிரதேச செயலக நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.