கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று காலை மோட்டார் சைக்கிள் துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றது. கிளிநொச்சியில் இருந்து முறுகண்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடக்க முயன்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றது.
சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர்கள் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.