28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கைக்குழந்தையுடன் குளத்தில் குதித்த தாய்

தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் குளத்தில்  குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்தில் வசிlindula

த்து வந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும் அவரது ஒரு வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்தனர்.

உயிரிழந்த பெண், தானும் குழந்தையும், தனது கணவர் மற்றும் கணவரின் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுவதாக மூன்று பக்க கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதம், திருமணச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தின் அருகே வைத்துவிட்டு இன்று காலை தனது சிறு குழந்தையுடன் குளத்தில் குதித்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குளத்தில் தாயின் சடலம் மிதப்பதாகவும், குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles