கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில், நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை – விவேகானந்த வீதியை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேதப் பரிசோதனைக்;காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன்ர.