கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த வேளை காரில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும்இ முச்சக்கரவண்டியில் பயணித்தவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்இ துப்பாக்கிச் சூடு நடத்ரியதற்கான காரணம் தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.