இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இன்று மேலும் 535 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 37 ஆயிரத்து 252 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.