கொரோனா தொற்றுக்கு அரசாங்கத்தின் தவறே காரணம் – சஜித்

0
413

அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித் துள்ளார்.

அரசியல் அதிகாரத்தை அரசாங்கம் கைவிட்டு மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவார ணம் வழங்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டி னார்.

தற்போது அரசாங்கம் 20வது திருத்தத்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது என்றும் கொரோனாவுடன் விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள் ளார்.

தற்போதைய நாட்டின் நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிடும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இதனைத் தெரிவித்துள்ளார்.