கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 10ஆவது நாளாகவும் தொடர்கிறது

0
183

கொழும்பு காலி முகத்திடலில் கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் எழுச்சி போராட்டமானது 10 ஆவது நாளாகவும் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆட்சி மாற்றம், 20ஆவது திருத்தத்தை நீக்குதல், 19 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தல், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு காலிமுகத்திடலில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சித்திரை புத்தாண்டுடன் கூடிய ஒருவார விடுமுறை இன்றுடன் நிறைவுக்கு வந்த நிலையில் அரச, தனியார் ஊழியர்கள் தங்களது பணிகளுக்கு திரும்பியுள்ள போதிலும்கூட அதனையும் பொருட்படுத்தாது இளைஞர், யுவதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் நாட்டின் பல பாகங்களில் தீப்பந்தப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அலுவலக தினமான இன்று காலை கொழும்பு காலிமுகத்திடலில் வாகன நெறிசல் அதிகரித்து காணப்பட்டது.

கொழும்பு காலிமுகத்திடலூடக பயணிக்கும் வாகனங்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒளி எழுப்பி செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.