சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன் கோட்டை கல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள சக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கினார்.
இதன்போது சிறுவர்களுக்கு சிறுவர் தின வாழ்த்துக்களை தெரிவித்த அவர், கோட்டை கல்லாறு சக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களையும் இனிப்பு வண்ணங்களையும் நேரில் சென்று வழங்கினார்.சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன் சொந்த நிதியிலிருந்தே குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டது.