26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட 14 வயது மாணவி

ரஷ்யாவில் பள்ளிக்குத் துப்பாக்கியுடன் சென்ற சிறுமி தன் சக மாணவர்களை சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்த குழந்தைகளில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

14 வயது சிறுமியிடம் எப்படி துப்பாக்கி வந்தது என்பது குறித்து சிறுமியின் தந்தையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரஷ்யாவில் கல்வி நிறுவனங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2022 ஏப்ரல் மற்றும் செப்டெம்பரில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் இரண்டு குழந்தைகள் மற்றும் 17 பேர் கொல்லப்பட்டதுடன், 24 பேர் காயமடைந்தனர். 

2018 மற்றும் 2021இல் பள்ளிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் மொத்தம் 29 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles