சஜித் பிரேமதாஸவை பிரதமராக நியமிப்பதே தற்போதைய நிலைமைக்கு சிறந்த தீர்வு என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி தேசிய அரசாங்கத்திற்காக ஜனாதிபதி முன்வைக்கும் பிரேரணை சரியான பயணத்திற்கு சரியான முறையில்
முன்வைக்கப்படுமாயின், தான் அதனுடன் இணைந்து நிற்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த தருணத்தில் நாட்டின் நலனுக்காக கட்சி அரசியலுக்கு பதிலாக மக்கள் அரசியலை நாடவேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.