29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஊர்காவற்துறையில் சட்டவிரோதமாக சங்கு வைத்திருந்தவர் கைது!

சட்டவிரோதமாக சங்கு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியில் சட்டவிரோதமாக கடற்சங்குகளை வைத்திருந்த
67 வயதுடைய நபர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவரிடமிருந்து 160 கடற்சங்குகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles